Sunday, October 2, 2011
கல்லூரி வாழ்கையின் கடைசி நாள் (ஏக்கத்துடன் நான் )
உலக வாழ்க்கை பேசும் என் மனமே
பிரச்சனைகள் அலசும் என் மனமே
எல்லாவற்றையும் செய்யும் உனக்கு
என் நண்பர்களைப் பற்றி தெரிய
வேண்டாமா...சொல்கிறேன் கேள் ...
எட்டுத் திக்கிலும் கிடைக்காத எட்டு மணிகளை
முதலாய்க் கண்டேன் முதலாம் வருடத்திலே..
கண் இமைக்கும் நேரத்தில் நட்பெனும்
காந்த சக்தியினால் ஈர்க்கப்பட்டோம் ...
காந்தத்தில் கூட ஈர்ப்பு வெறுப்பு எனும் இரு
துருவங்கள் உண்டு ...ஆனால் எங்கள் நட்பில்
ஈர்ப்பு துருவம் மட்டுமே ..
ஒருவரை ஒருவர் ஈர்த்தோம் ஈர்த்தோம்
ஆனால் காலத்திற்கு எங்கள் மேல் பொறமை
பொங்கி விட்டான் போலும் ..பிரியும் நாள் வந்துவிட்டது
சென்று வா என்கிறார்கள் ..எங்கு செல்வேன்
அவர்களை விடுத்து ..
என் எழுதுகோல் பேச மறுக்கும் வார்த்தைகளை
என் சொல்லி விளக்குவேன்...
உணர்வுகள் உளறுகிறது...பேச வார்த்தை இல்லை ...
நன்றி சொல்ல நாட்கள் இல்லை..கடைசியாக
நான் கூற நினைக்கும் ஒரு வார்த்தை மூன்று எழுத்தாயினும்
மிகையாக நான் கருதும் ஓர் வார்த்தையான நன்றியை சமர்பிக்கிறேன் ..
நன்றி நன்றி நன்றி தோழிகளே !!!!
Subscribe to:
Posts (Atom)
