66- ம் சுதந்திர தின நாள் வந்து விட்டது..
எப்பொழுதும் என் அழைப்பை ஏற்று வரும்
என் எழுதுகோல் இன்று ஆர்வத்துடன் தானாகவே
வந்து விட்டது...சரி என் இந்தியாவில் சுதந்திரத்துக்கு
பஞ்சமே இல்லை..உனக்கு மட்டும் என்ன குறைவு ..
உன் சுதந்திரத்துக்கு நான் தடையாக இருக்கவில்லை ..
நீ உன் உல்லாச நடைசெல் என்றேன் ..பின்னர் தான் உணர்ந்தேன்..
இதற்கு சுதந்திரம் கொடுத்தது தவறு என்று..
எத்தனை கேள்விகள் !!விடை அளிக்கவே இயலவில்லை..
ஆம்..முதல் கேள்வியே என்னை அதிர வைத்துவிட்டது..
என் எழுதுகோல் கேட்கிறது ?? விடுதலை நாள்..இன்று தலைவர்களின் நினைவு மண்டபங்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழியுமா ??
இல்லை இல்லை மக்கள் அங்கு எல்லாம் செல்ல மாட்டார்கள் ..
ஓ !! அப்படியெனில் பள்ளி கூடங்களில் எல்லாம் வரலாற்றைப் பற்றி இந்நாளில் கூட்டம் கூட்டப்படுமா ??
இல்லை இல்லை ..பள்ளிகூடங்களுக்கு அன்று விடுமுறை என்றேன்..
ஓ !!அப்படியெனில் ஒவ்வொரு வீதிகளிலும் அவர்கள் தியாகம் நினைவு கூறப்படுமா ??
இல்லை இல்லை கூட்டங்கள் எல்லாம் கட்சிகளுக்காக மட்டுமே..இதற்கெல்லாம் பெரும்பாலும் இல்லை ..
ஓ !! அப்படியெனில் தொலைகாட்சிகளில்அரும்பெரும் அத்தகைய காட்சிகளை கொண்ட படங்கள் ஒளிபரப்படுமோ ??
இல்லை இல்லை தொலைகாட்சிகளில் புதிய படங்களை பற்றி தான் வரும்..
ஓ !! அப்படியெனில் உங்கள் வரலாற்றை நீங்கள் நன்றி பாராட்டும் நாளே உங்களிடம் கிடையாதா ???
இவ்வளவு கேள்விகள் கேட்டது போதும் உனக்கு சுதந்திரம் அளித்தது தவறு என்று கூறிவிட்டு மூடிக்குள் அடைத்து விட்டேன் எங்கள் அரசியல்வாதிகளைப் போன்றே!!
ஒரு நாட்டின் இளைநர்களுக்கு அதன் வரலாறு தெரிந்திருப்பது மிகவும் அவசியம்..ஆனால் இந்திய வரலாறு ???