Saturday, August 6, 2011
????
உனக்கென்று யாரும் இல்லையோ??
உன்னால் பேச இயலாதா??
ஏன் இந்த சோகம்??
என் தனிமை என்னைப் பார்த்து
கேட்ட கேள்விகள் இவை ..
பதில் தேடிப் புறப்பட்டேன்
கால்கள் போன பாதையில் ..
அப்போது தான் புரிந்தது ..
விடை தேட இது புத்தகம் இல்லை!!
மாபெரும் கடல் என்று !!
அன்று ஒரு நாள் என் மனதில்
உணர்விற்கும் உலகத்திற்கும் இடையே
ஏற்படும் போராட்டம் இது...
இருண்டிருப்பது இவ்வுலகமா ??
இல்லை என் மனமா ??
விளக்கம் அழிக்கவோ
பதில் கூறவோ இங்கே
ஒரு கார்ல் மார்க்ஸ்ம் இல்லை..
லெனினும் இல்லை ...
ஏன் இங்கு மனிதர்களும் இல்லை..
காலம் கடக்க கால்கள் உண்டு ...
ஆனால் அதை ரசித்து
செல்ல இன்பம் இல்லை ...
எல்லாமே உண்டு ...
ஆனால் எதுவுமே இல்லை ...
புதிருக்குள் வாழ்க்கை !!
கண்ணீருக்குள் இதயம் !!
Subscribe to:
Posts (Atom)


