Sunday, November 20, 2011

ஒரு வேளை


பெண்ணாக இருப்பது தான் இவ்வளவு இருந்தும் நீ முன்னேற தடைகளா ??
சொல்லடி என் இந்தியத் தாயே !!

Saturday, November 5, 2011

நிமிர்ந்த நன்னடை .....


நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும்
என்றான் என் பாரதி ...அவரது கூற்றோடு என் கூற்றையும் சேர்த்துக் கொள்கிறேன் ...
இன்றைய பெண்களுக்கு இது மட்டும் போதாது ..

பகலவனைக் கூட பெயர்த்து எடுக்கும்
வீரிய பார்வை வேண்டும்!!

எங்கும் எதிலும் எதையும் சாதிக்கும்
வீரியம் வேண்டும் !!

சுருக்கமாகச் சொன்னால் பெண்கள் நீரினைப் போன்று இருக்க வேண்டும்....
அமைதியாய் இருக்கும் வரை அழகிய கடல் ...
பொங்கினால் சுனாமி !!
இவ்வுலகில் இதுவரை நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி எனில் ரஷ்யப் புரட்சியை சொல்லலாம்...இன்னும் நிறைய மிகவும் சக்தி வாய்ந்த, வலிமை வாய்ந்த புரட்சிகள் உண்டு...ஆனால் இதை விடவும் வலிமை வாய்ந்த பெரிய புரட்சிகள் உள்ளது ..அவை என்ன தெரியுமா ??


தனிமனிதன் மனதில் ஏற்படும் மனப் புரட்சிகள் ...
இதன் வலி, இழப்பு அவனுக்கு மட்டுமே தெரியும்..
அப்படி ஏற்படும் புரட்சிகளை வரலாறு அறியாது...
அதற்கு எந்த சுவடும் கிடையாது...
அது அவனுக்கு உள்ளேயே ஒடுங்கி ஒடுங்கி அவனைக் கொல்லும்..