Wednesday, April 20, 2011

மௌனக் கனவுகள்( ∂є∂ι¢αтє∂ 2 αℓ gαℓz)




சிறகுகள் உண்டு...பறக்க வழியில்லை ...
சிந்தனை உண்டு...சிந்திக்க வழியில்லை ...
சந்தோஷம் உண்டு...சிரிக்க வழியில்லை ...
சுதந்திரம் உண்டு...சுவாசிக்க வழியில்லை ...
ஆசை உண்டு...அனுபவிக்க வழியில்லை ...
கனவு உண்டு...மெய்ப்பிக்க வழியில்லை ...
அன்பு உண்டு...ஆர்ப்பரிக்க வழியில்லை ...
காதல் உண்டு...வெளிப்படுத்த வழியில்லை ...
ஏக்கம் உண்டு...சொல்வதற்கு வழியில்லை ...
மொத்தத்தில் கூண்டு இல்லை...ஆனால்
அதற்குள் தான் இருக்கிறோம்...
ஆம் என் தேசத்து பெண்களின் நிலைதான் இது...
சோதனை உண்டு...சொல்வதற்கு ஆளில்லை...
வேதனை உண்டு...வேண்டுவதற்கு ஆளில்லை...
கற்பனை உண்டு...கேட்பதற்கு ஆளில்லை...
வாழ்வு முழுவதும் இல்லை என்பதே அதிகம்!!!

Saturday, April 16, 2011

கேள்விக் குறிகள் கேள்வி கேட்க மட்டுமே!!!

சொல்லடி சிவசக்தி!!!எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!!!

சிவசக்தியே நீதான் இவ்வுலகில் மனிதர்களை படைக்கிறாய்
எனில்உன்னிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுகிறேன்.....
தயவு செய்து சுடர்மிகும் அறிவுடன் இனி யாரையும் படைக்காதே...
எங்களால் இவ்வுலகில் வாழவும் இயலாது....சாகவும் இயலாது...
சகிக்கவும் இயலாது...சாதிக்கவும் இயலாது...
பொறுக்கவும் இயலாது...பொங்கவும் இயலாது...
மொத்தத்தில் பல சுனாமிகள் மனதினுள் எழுகிறது...
உள்ளத்தில் தினம் தினம் வெடிக்கும்
எரிமலைக்கு என்ன பதில் சொல்ல போகிறாய்???

Wednesday, April 13, 2011

என் இந்தியாவே !!!

மிதவாதிகள் கூறிய வழியில் சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும்
என் இந்தியாவே அவர்களின் கோட்பாட்டின் படியே ஆட்சி நடக்கிறதோ??
அவர்களைப் போன்றே நீயும் மிதந்து கொண்டிரு....
கூடிய விரைவில் மூழ்கப் போகிறாய்!!!
அப்போது அமெரிக்கா,இங்கிலாந்த் போன்ற நாடுகள் எல்லாம் உன்
குரல் கேட்டு ஓடோடி வரும்..
கைக் கொடுத்துக் காப்பாற்றுவதற்கு அல்ல...
உள்ளேயே வைத்து சமாதி கட்டுவதற்கு!!
நான் பிழைத்தால் அதை ஒரு புத்தகமாக எழுதி
வருங்கால சந்ததியினர்க்கு சமர்பிக்கிறேன்...

-உணர்வில்லாத நாட்டில் வாழும் உணர்வற்ற இந்தியப் பிரஜை