சொல்லடி சிவசக்தி!!!எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்!!!
சிவசக்தியே நீதான் இவ்வுலகில் மனிதர்களை படைக்கிறாய்
எனில்உன்னிடத்தில் ஒரு வேண்டுகோள் விடுகிறேன்.....
தயவு செய்து சுடர்மிகும் அறிவுடன் இனி யாரையும் படைக்காதே...
எங்களால் இவ்வுலகில் வாழவும் இயலாது....சாகவும் இயலாது...
சகிக்கவும் இயலாது...சாதிக்கவும் இயலாது...
பொறுக்கவும் இயலாது...பொங்கவும் இயலாது...
மொத்தத்தில் பல சுனாமிகள் மனதினுள் எழுகிறது...
உள்ளத்தில் தினம் தினம் வெடிக்கும்
எரிமலைக்கு என்ன பதில் சொல்ல போகிறாய்???
பதில்கள் இல்லை கேள்வி மட்டும் உள்ளது !!!!
ReplyDelete