Wednesday, April 13, 2011

என் இந்தியாவே !!!

மிதவாதிகள் கூறிய வழியில் சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும்
என் இந்தியாவே அவர்களின் கோட்பாட்டின் படியே ஆட்சி நடக்கிறதோ??
அவர்களைப் போன்றே நீயும் மிதந்து கொண்டிரு....
கூடிய விரைவில் மூழ்கப் போகிறாய்!!!
அப்போது அமெரிக்கா,இங்கிலாந்த் போன்ற நாடுகள் எல்லாம் உன்
குரல் கேட்டு ஓடோடி வரும்..
கைக் கொடுத்துக் காப்பாற்றுவதற்கு அல்ல...
உள்ளேயே வைத்து சமாதி கட்டுவதற்கு!!
நான் பிழைத்தால் அதை ஒரு புத்தகமாக எழுதி
வருங்கால சந்ததியினர்க்கு சமர்பிக்கிறேன்...

-உணர்வில்லாத நாட்டில் வாழும் உணர்வற்ற இந்தியப் பிரஜை

1 comment: