
சிறகுகள் உண்டு...பறக்க வழியில்லை ...
சிந்தனை உண்டு...சிந்திக்க வழியில்லை ...
சந்தோஷம் உண்டு...சிரிக்க வழியில்லை ...
சுதந்திரம் உண்டு...சுவாசிக்க வழியில்லை ...
ஆசை உண்டு...அனுபவிக்க வழியில்லை ...
கனவு உண்டு...மெய்ப்பிக்க வழியில்லை ...
அன்பு உண்டு...ஆர்ப்பரிக்க வழியில்லை ...
காதல் உண்டு...வெளிப்படுத்த வழியில்லை ...
ஏக்கம் உண்டு...சொல்வதற்கு வழியில்லை ...
மொத்தத்தில் கூண்டு இல்லை...ஆனால்
அதற்குள் தான் இருக்கிறோம்...
ஆம் என் தேசத்து பெண்களின் நிலைதான் இது...
சோதனை உண்டு...சொல்வதற்கு ஆளில்லை...
வேதனை உண்டு...வேண்டுவதற்கு ஆளில்லை...
கற்பனை உண்டு...கேட்பதற்கு ஆளில்லை...
வாழ்வு முழுவதும் இல்லை என்பதே அதிகம்!!!
வாழ்வு முழுவதும் இல்லை என்பதே அதிகம்!!!
ReplyDeleteம்ம்ம் என்னை கவர்ந்த வரிகள் :)
Write some thing for boys yaar....
ReplyDeleteYou are the great person .you should not tell like this.
ReplyDelete